கிராமப்புற அஞ்சல் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்


கிராமப்புற அஞ்சல் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 2 May 2019 10:45 PM GMT (Updated: 2 May 2019 8:12 PM GMT)

புதுக்கோட்டை கோட்ட கிராமப்புற அஞ்சல் ஊழியர் சங்கங்கள் (ஏ.ஐ.ஜி.டி.எஸ்.யு., என்.எப்.பி.இ.ஜி.டி.எஸ்., என்.யு.ஜி.டி.எஸ்.) சார்பில் புதுக்கோட்டை தலைமை தபால் நிலையம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

புதுக்கோட்டை,

புதுக்கோட்டை கோட்ட கிராமப்புற அஞ்சல் ஊழியர் சங்கங்கள் (ஏ.ஐ.ஜி.டி.எஸ்.யு., என்.எப்.பி.இ.ஜி.டி.எஸ்., என்.யு.ஜி.டி.எஸ்.) சார்பில் புதுக்கோட்டை தலைமை தபால் நிலையம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு ஏ.ஐ.ஜி.டி.எஸ்.யு. தலைவர் அடைக்கலம் தலைமை தாங்கினார். டிவைஸ், நெட்வோர்க், சர்வர் போன்றவற்றில் உள்ள குளறுபடிகளை நீக்க வேண்டும். இந்த பிரச்சினைகள் தீரும்வரை எங்களை மேனுவல் வேலை பார்க்க அனுமதிக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு கிராமப்புற அஞ்சல் ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர். 

Next Story