முத்துப்பேட்டை அருகே, மது விற்ற 2 பேர் கைது
முத்துப்பேட்டை அருகே மது விற்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
முத்துப்பேட்டை,
முத்துப்பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஜயகிருஷ்ணன் மற்றும் போலீசார் நேற்று காலை தில்லைவிளாகம் நமச்சிக்காடு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த பகுதியில் மது விற்ற ஒருவரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர், அதே பகுதியை சேர்ந்த சுப்பிரமணியன் (வயது 60) என்பதும், டாஸ்மாக் கடையில் இருந்து மதுபாட்டில்களை வாங்கி வந்து விற்றதும் தெரியவந்தது. இதுகுறித்து முத்துப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து சுப்பிரமணியனை கைது செய்தனர். பின்னர் அவரிடம் இருந்து 11 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
இதேபோல நாச்சிக்குளம் தெற்குபள்ளியமேடு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த முத்துப்பேட்டை போலீசார், மது விற்ற அதே பகுதியை சேர்ந்த மகாலிங்கம் (50) என்பவரை கைது செய்தனர். பின்னர் அவரிடம் இருந்து 8 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
Related Tags :
Next Story