திருவையாறு அருகே, வாலிபருக்கு அரிவாள் வெட்டு - மர்ம நபர்களுக்கு வலைவீச்சு


திருவையாறு அருகே, வாலிபருக்கு அரிவாள் வெட்டு - மர்ம நபர்களுக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 24 May 2019 11:00 PM GMT (Updated: 25 May 2019 12:12 AM GMT)

திருவையாறு அருகே வாலிபரை அரிவாளால் வெட்டிய மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

திருவையாறு,

தஞ்சை மாவட்டம் திருவையாறு அருகே அம்மன்பேட்டை வடக்குதெருவை சேர்ந்தவர் சுரேஷ்குமார். இவருடைய மகன் சுகுமார் (வயது 26). இவர் மோட்டார் சைக்கிளில் நேற்று திருவையாறுக்கு சென்றுவிட்டு, அம்மன்பேட்டைக்கு திரும்பி கொண்டிருந்தார். அரசூர் பகுதியில் இவர் வந்தபோது இவருடைய மோட்டார் சைக்கிளை வழிமறித்த 4 பேர், சுகுமாரை சரமாரியாக அரிவாளால் வெட்டிவிட்டு, தப்பி ஓடிவிட்டனர்.

இதுகுறித்து அந்த வழியாக வந்தவர்கள் நடுக்காவேரி போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் திருவையாறு துணை போலீஸ் சூப்பிரண்டு பெரியண்ணன், இன்ஸ்பெக்டர் ஜெகதீசன், மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, வெட்டு காயங்களுடன் உயிருக்கு போராடி கொண்டிருந்த சுகுமாரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து நடுக்காவேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து, வாலிபரை அரிவாளால் வெட்டிய மர்ம நபர்கள் யார்? ஏன் அவரை அரிவாளால் வெட்டினர் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். வாலிபர் வெட்டப்பட்ட இடத்தில் பொதுமக்கள் குவிந்ததால்

தஞ்சை-திருவையாறு சாலையில் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப் பட்டது. பட்டப்பகலில் நடைபெற்ற இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story