கோபி அருகே பரிதாபம்; கார் மோதி கோவில் பூசாரி சாவு


கோபி அருகே பரிதாபம்; கார் மோதி கோவில் பூசாரி சாவு
x
தினத்தந்தி 1 Jun 2019 10:00 PM GMT (Updated: 1 Jun 2019 6:21 PM GMT)

கோபி அருகே கார் மோதி கோவில் பூசாரி பரிதாபமாக இறந்தார்.

கடத்தூர்,

ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள பழனிக்கவுண்டன்பாளையத்தை சேர்ந்தவர் குமரான் (வயது 75). இவர் வெங்கமேட்டுப்புதூரில் உள்ள கருப்பசாமி கோவிலில் பூசாரியாக வேலை பார்த்து வந்தார்.

நேற்று காலை குமரான் நம்பியூர்–கோபி ரோட்டில் நடந்து சென்று கொண்டு இருந்தார். அப்போது அந்த வழியாக வந்த கார் ஒன்று குமரான் மீது எதிர்பாராதவிதமாக மோதியது.

இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்ட குமரான் படுகாயம் அடைந்தார். இதைப்பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக கோபி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி குமரான் பரிதாபமாக இறந்தார்.

இந்த விபத்து குறித்து கடத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்ற கார் டிரைவரை தேடி வருகிறார்கள்.


Next Story