திருக்காட்டுப்பள்ளி அருகே பூண்டி மாதா பேராலயத்தில் புதுமை இரவு வழிபாடு திரளான கிறிஸ்தவர்கள் பங்கேற்பு


திருக்காட்டுப்பள்ளி அருகே பூண்டி மாதா பேராலயத்தில் புதுமை இரவு வழிபாடு திரளான கிறிஸ்தவர்கள் பங்கேற்பு
x
தினத்தந்தி 9 Jun 2019 10:30 PM GMT (Updated: 9 Jun 2019 7:22 PM GMT)

திருக்காட்டுப்பள்ளி அருகே பூண்டி மாதா பேராலயத்தில் புதுமை இரவு வழிபாடு நடைபெற்றது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.

திருக்காட்டுப்பள்ளி,

தஞ்சை மாவட்டம திருக்காட்டுப்பள்ளி அருகே பூண்டி மாதா பேராலயம் உள்ளது. பல்வேறு சிறப்பு பெற்ற இந்த பேராலயத்தில் புதுமை இரவு வழிபாடு நடைபெற்றது. சேலம் மறைமாவட்ட அருட்தந்தை கிருபாகரன் புதுமை இரவு நிகழ்வுகளை ஒழுங்கு செய்து நடத்தினார். முதலில் திருப்பலி நடைபெற்றது. இதை தொடர்ந்து பூண்டி மாதாவின் சொரூபத்துடன் பக்தர்கள் ஜெபமாலை பாடல்களுடன் தேர்பவனி நடந்தது. பின்னர் இரவில் நற்கருணை ஆராதனையுடன் ஜெபவழிபாடு நடைபெற்றது.

இதில் பேராலய அதிபர் பாக்கியசாமி, துணை அதிபர் அல்போன்ஸ், தியான மைய இயக்குனர் குழந்தைராஜ், உதவி பங்குத்தந்தையர்கள். ஜெயன், ஜேம்ஸ், ஆன்மிக தந்தை அருள் மற்றும் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.

Next Story