பராமரிப்பு பணி: இன்று மின்சார ரெயில் போக்குவரத்தில் மாற்றம்


பராமரிப்பு பணி: இன்று மின்சார ரெயில் போக்குவரத்தில் மாற்றம்
x
தினத்தந்தி 15 Jun 2019 11:00 PM GMT (Updated: 15 Jun 2019 8:53 PM GMT)

பராமரிப்பு பணி காரணமாக இன்று மின்சார ரெயில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

மும்பை,

மத்திய ரெயில்வே வழித்தடத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 11.20 மணி முதல் பிற்பகல் 3.50 மணி வரை மாட்டுங்கா - முல்லுண்டு இடையே ஸ்லோ வழித்தடத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே காலை 10.57 மணி முதல் பிற்பகல் 3.52 மணி வரை ஸ்லோ ரெயில்கள் அனைத்தும் முல்லுண்டு - மாட்டுங்கா இடையே விரைவு வழித்தடத்தில் இயக்கப்படும்.

இந்த ரெயில்கள் சயான், குர்லா, காட்கோபர், விக்ரோலி, பாண்டுப், முல்லுண்டு ஆகிய ரெயில்நிலையங்களில் நிற்கும். வித்யாவிகார், காஞ்சூர்மார்க், நாகுர் ஆகிய இடங்களில் நிற் காது. பயணிகள் காட்கோபர், பாண்டுப், முல்லுண்டு ஆகிய ரெயில்நிலையங்களில் இருந்து சி.எஸ்.எம்.டி. நோக்கி வரும் ஸ்லோ ரெயில்களில் அந்த இடங்களுக்கு செல்லலாம்.

துறைமுக வழித்தடத்தில் சி.எஸ்.எம்.டி. - சுன்னாப்பட்டி, சி.எஸ்.எம்.டி. - பாந்திரா இடையே காலை 11.40 மணி முதல் மாலை 4.10 மணி வரை பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. எனவே காலை 11.34 மணி முதல் மாலை 4.23 மணி வரை சி.எஸ்.எம்.டி.யில் இருந்து வாஷி, பேலாப்பூர் மற்றும் பன்வெலுக்கு ரெயில்கள் இயக்கப்படாது.

இதேபோல காலை 9.53 மணி முதல் பிற்பகல் 2.44 மணி வரை பன்வெல், பேலாப்பூர் மற்றும் வாஷியில் இருந்து சி.எஸ்.எம்.டி.க்கு ரெயில் சேவை இருக்காது. இந்த நேரத்தில் குர்லா - பன்வெல் இடையே சிறப்பு ரெயில்கள் இயக்கப்படும்.

மேலும் காலை 9.56 மணி முதல் மாலை 4.16 மணி வரை சி.எஸ்.எம்.டி.யில் இருந்து பாந்திரா, அந்தேரி, கோரேகாவுக்கும், காலை 10.45 மணி முதல் மாலை 4.58 மணி வரை கோரேகாவ், அந்தேரி, பாந்திராவில் இருந்து சி.எஸ்.எம்.டி.க்கும் ரெயில்கள் இயக்கப்படாது.

மேற்கு ரெயில்வே வழித்தடத்தில் சர்ச்கேட் - மும்பை சென்ட்ரல் இடையே விரைவு ரெயில் வழித்தடத்தின் இருமார்க்கத்திலும் காலை 10.35 முதல் பிற்பகல் 3.35 மணி வரை பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது.

எனவே இந்த நேரத்தில் அனைத்து விரைவு ரெயில்களும் சர்ச்கேட் - மும்பை சென்ட்ரல் இடையே ஸ்லோ வழித்தடத்தில் இயக்கப்படும்.

இந்த தகவலை மத்திய, மேற்கு ரெயில்வே வெளியிட்டுள்ளது.

Next Story