பெரம்பலூரில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தக்கோரி வியாபாரிகள் நலச்சங்கத்தினர் கலெக்டரிடம் மனு


பெரம்பலூரில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தக்கோரி வியாபாரிகள் நலச்சங்கத்தினர் கலெக்டரிடம் மனு
x
தினத்தந்தி 20 July 2019 11:00 PM GMT (Updated: 20 July 2019 5:33 PM GMT)

பெரம்பலூரில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தக்கோரி வியாபாரிகள் நலச்சங்கத்தினர் கலெக்டர் சாந்தாவிடம் மனு கொடுத்தனர்.

பெரம்பலூர்,

பெரம்பலூர் நகரில் அதிகரிக்கும் போக்குவரத்து நெருக்கடியை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் சாந்தா, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு திஷா மித்தல், பெரம்பலூர் நகராட்சி ஆணையர் (பொறுப்பு) ராதா ஆகியோரிடம் வியாபாரிகள் நலச்சங்க நிர்வாகிகள் மனு அளித்தனர். பெரம்பலூர் வியாபாரிகள் நலச்சங்க தலைவர் முகுந்தன், சங்க செயலாளர் ஒஜீர், துணைத் தலைவர் சிவக்குமார், துணைச் செயலாளர் முத்தையா ஆகியோர் அளித்த மனுவில், பெரம்பலூர் என்.எஸ்.பி. சாலையில் அமைந்துள்ள தடுப்புகளை அகற்றி, இருபுறமும் நடைபாதைகள் அமைத்து சாலையில் போக்குவரத்து நெருக்கடியை தவிர்க்க வேண்டும். பழைய பஸ் நிலைய பகுதியில் உள்ள தள்ளுவண்டி கடைகளுக்கு மாற்று இடம் ஒதுக்கி, வாகனங்கள் நிறுத்த ஏற்பாடு செய்துதர வேண்டும்.

பெரம்பலூர் சங்குப்பேட்டை பகுதியில் உள்ள தானியங்கி சிக்னலை சீரமைத்து போக்குவரத்து நெருக்கடியை தவிர்க்க நடவடிக்கை எடுக்கவேண்டும். பெரம்பலூர் காந்தி சிலை அருகே அமைக்கப்பட்டுள்ள உயர்மின் கோபுர விளக்கை சீரமைக்க வேண்டும். கடைவீதியில் உள்ள ஊராட்சி ஒன்றியத்துக்கு சொந்தமான இடத்தில் வாகன நிறுத்தம் அமைக்க, வாடகைக்கு ஒதுக்கி தரவேண்டும். நகரின் பல்வேறு பகுதிகளில் சுகாதாரமின்றி வைக்கப்பட்டுள்ள இறைச்சி கடைகளை ஒதுக்குப்புறமான இடத்தில் அமைத்து, சுகாதார சீர்கேட்டை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.

Next Story