ஆலங்குடி அருகே சிறுமி பலாத்கார வழக்கில் முதியவருக்கு வாழ்நாள் சிறை புதுக்கோட்டை மகிளா கோர்ட்டு தீர்ப்பு
ஆலங்குடி அருகே சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் முதியவருக்கு வாழ்நாள் சிறை தண்டனை விதித்து புதுக்கோட்டை மகிளா கோர்ட்டு தீர்ப்பளித்தது.
புதுக்கோட்டை,
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி கலிபுல்லா நகரை சேர்ந்தவர் அசரப்அலி (வயது 68). இவர் ஒரு 7 வயது சிறுமியை கடந்த 3.9.2018 அன்று பாலியல் பலாத்காரம் செய்து உள்ளார். இதுகுறித்து சிறுமியின் தாயார் ஆலங்குடி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
அதன்பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் அசரப்அலி மீது வழக்குப் பதிவு செய்து, அவரை சிறையில் அடைத்தனர்.
இந்த வழக்கு விசாரணை புதுக்கோட்டையில் உள்ள மகிளா கோர்ட்டில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ராஜலெட்சுமி நேற்று தீர்ப்பு கூறினார். அப்போது, 7 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த அசரப்அலிக்கு வாழ்நாள் சிறை தண்டனையும், ஆயிரம் ரூபாய் அபராதமும், அபராத தொகையை கட்ட தவறினால் மேலும் 6 மாத சிறை தண்டனை விதித்தும், மேலும் பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்திற்கு நஷ்ட ஈடாக ரூ.7 லட்சம் தமிழக அரசு வழங்க வேண்டும் எனவும் தீர்ப்பு கூறினார்.
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி கலிபுல்லா நகரை சேர்ந்தவர் அசரப்அலி (வயது 68). இவர் ஒரு 7 வயது சிறுமியை கடந்த 3.9.2018 அன்று பாலியல் பலாத்காரம் செய்து உள்ளார். இதுகுறித்து சிறுமியின் தாயார் ஆலங்குடி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
அதன்பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் அசரப்அலி மீது வழக்குப் பதிவு செய்து, அவரை சிறையில் அடைத்தனர்.
இந்த வழக்கு விசாரணை புதுக்கோட்டையில் உள்ள மகிளா கோர்ட்டில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ராஜலெட்சுமி நேற்று தீர்ப்பு கூறினார். அப்போது, 7 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த அசரப்அலிக்கு வாழ்நாள் சிறை தண்டனையும், ஆயிரம் ரூபாய் அபராதமும், அபராத தொகையை கட்ட தவறினால் மேலும் 6 மாத சிறை தண்டனை விதித்தும், மேலும் பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்திற்கு நஷ்ட ஈடாக ரூ.7 லட்சம் தமிழக அரசு வழங்க வேண்டும் எனவும் தீர்ப்பு கூறினார்.
Related Tags :
Next Story