ஊதியூர் அருகே தூக்குப்போட்டு இளம்பெண் தற்கொலை - கையில் பிளேடால் அறுத்திருந்ததால் போலீஸ் விசாரணை


ஊதியூர் அருகே தூக்குப்போட்டு இளம்பெண் தற்கொலை - கையில் பிளேடால் அறுத்திருந்ததால் போலீஸ் விசாரணை
x
தினத்தந்தி 8 Sep 2019 10:45 PM GMT (Updated: 8 Sep 2019 7:15 PM GMT)

ஊதியூர் அருகே தூக்குப்போட்டு இளம்பெண் தற்கொலை செய்து கொண்டார். கையில் பிளேடால் அறுத்திருந்ததால் போலீசார் தீவிர விசாரணை நடத்தினா்.

காங்கேயம்,

காங்கேயத்தை அடுத்து ஊதியூர் அருகே உள்ள தாளக்கரை என்ற கிராமத்தை சேர்ந்த பராசக்தி என்பவரின் மகள் ஐஸ்வர்யா (வயது 21). இவர் கொடுவாயில் உள்ள ஒரு தனியார் பனியன் நிறுவனத்தில் டெய்லராக வேலை பார்த்து வந்துள்ளார். இவர் நேற்று முன்தினம் வீட்டில் உள்ள விட்டத்தில் சேலையால் தூக்குப்போட்டு தொங்கியுள்ளார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது குடும்பத்தினர் அவரை உடனடியாக கீழே இறக்கி பார்த்த போது இடது கையில் பிளேடால் கிழித்து ரத்தம் வழிந்து இருந்ததை பார்த்தனர். உடனே மயங்கி கிடந்த அவரை ஆம்புலன்ஸ் மூலம் காங்கேயம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியிலேயே ஐஸ்வர்யா பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து தகவல் அறிந்த ஊதியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் தற்கொலை செய்து கொண்ட ஐஸ்வர்யாவுக்கு நீண்ட நாட்களாக வயிற்று வலி இருந்து வந்துள்ளது. சம்பவத்தன்று இதேபோல கடுமையான வயிற்று வலி இருந்துள்ளது. இதனால் மனமுடைந்து போன அவர் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து இடது கையில் பிளேடால் கிழித்தும் அதன்பின்பு தூக்கு மாட்டியும் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது. இருப்பினும் வேறு ஏதேனும் காரணம் இருக்கிறதா? என விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story