சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை - கிருஷ்ணகிரி கோர்ட்டு தீர்ப்பு


சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை - கிருஷ்ணகிரி கோர்ட்டு தீர்ப்பு
x
தினத்தந்தி 26 Sep 2019 10:30 PM GMT (Updated: 26 Sep 2019 8:27 PM GMT)

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து கிருஷ்ணகிரி கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.

கிருஷ்ணகிரி, 

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை சேர்ந்தவள் 11 வயது சிறுமி. கடந்த 30.3.2015 அன்று மாலை இந்த சிறுமிக்கு ஓசூர் சின்ன எலசகிரி காமராஜ் நகர் துளசியம்மா தெருவை சேர்ந்த பாஸ்கர் (வயது 49) என்ற தொழிலாளி பாலியல் தொந்தரவு கொடுத்தார். இது தொடர்பாக சிறுமி அவரது பெற்றோரிடம் புகார் செய்தாள்.

சிறுமியின் பெற்றோர் ஓசூர் சிப்காட் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். இது குறித்து அப்போதைய ஓசூர் உதவி போலீஸ் சூப்பிரண்டு ரோகிணி பிரியதர்ஷினி, சிப்காட் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி ஆகியோர் விசாரணை நடத்தி, பாஸ்கரை கைது செய்தனர்.

இந்த வழக்கு கிருஷ்ணகிரி மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி நேற்று தீர்ப்பு கூறினார். அதன்படி குற்றம் சாட்டப்பட்ட பாஸ்கருக்கு, ஆயுள் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து பாஸ்கரை போலீசார் கைது செய்து வேலூர் மத்திய சிறைக்கு கொண்டு சென்றனர்.

இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் கலையரசி ஆஜர் ஆகி வாதாடினார்.

Next Story