குத்தாலம் அருகே மோட்டார் சைக்கிள் மீது அரசு பஸ் மோதல்; தொழிலாளி பலி


குத்தாலம் அருகே மோட்டார் சைக்கிள் மீது அரசு பஸ் மோதல்; தொழிலாளி பலி
x
தினத்தந்தி 15 Oct 2019 10:15 PM GMT (Updated: 15 Oct 2019 6:53 PM GMT)

குத்தாலம் அருகே மோட்டார் சைக்கிள் மீது அரசு பஸ் மோதிய விபத்தில் தொழிலாளி பலியானார்.

குத்தாலம்,

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் தாலுகா ஏனங்குடி வடக்கு தெருவை சேர்ந்தவர் பாலு (வயது 36). கூலித்தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் மோட்டார் சைக்கிளில், நாகை மாவட்டம் குத்தாலம் தாலுகா ஸ்ரீகண்டபுரத்தில் உள்ள அவரது உறவினர் வீட்டிற்கு சென்றுவிட்டு, மோட்டார் சைக்கிளில் ஏனங்குடிக்கு சென்று கொண்டிருந்தார்.ஸ்ரீகண்டபுரம் மெயின்ரோட்டில் சென்றபோது எதிரே காரைக்காலில் இருந்து பெங்களூரு நோக்கி சென்ற அரசு விரைவு பஸ் எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

தொழிலாளி பலி

இதில் பலத்த காயம் அடைந்த பாலு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். தகவல் அறிந்த பாலையூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வேலுதேவி மற்றும் போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பாலு உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து பாலுவின் உறவினர் பாலையூர் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த சண்முகம் மகன் பாபு (25) என்பவர் கொடுத்த புகாரின்பேரில் போலீசார் அரசு பஸ் டிரைவர் அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் தாலுகா வெண்மான்கொண்டான் கிராமத்தை சேர்ந்த ஹரிகிரு‌‌ஷ்ணன் என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story