உள்ளாட்சி தேர்தல்: வாக்குப்பதிவு எந்திரங்கள் சரிபார்க்கும் பணி கலெக்டர் ஆய்வு


உள்ளாட்சி தேர்தல்: வாக்குப்பதிவு எந்திரங்கள் சரிபார்க்கும் பணி கலெக்டர் ஆய்வு
x
தினத்தந்தி 3 Nov 2019 11:00 PM GMT (Updated: 3 Nov 2019 10:04 PM GMT)

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலுக்கு பயன்படுத்தப்பட உள்ள வாக்குப்பதிவு எந்திரங்கள் சரிபார்க்கும் பணி நடந்தது. இதை கலெக்டர் பிரபாகர் ஆய்வு செய்தார்.

கிருஷ்ணகிரி,

தமிழ்நாட்டில் உள்ளாட்சி தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதையொட்டி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலுக்கு பயன்படுத்தப்பட உள்ள மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் முதல் நிலை சரிபார்க்கும் பணி கிருஷ்ணகிரி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நடந்தது.

இதில் 2 ஆயிரத்து 631 வாக்குப்பதிவு எந்திரங்கள் மற்றும் 900 கன்ட்ரோல் யூனிட் என மொத்தம் 3 ஆயிரத்து 531 எந்திரங்களை முதல் நிலை சரிபார்ப்பு பணி நடந்தது.

கலெக்டர் ஆய்வு

மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் முதல் நிலை சரிபார்க்கும் பணியை மாவட்ட கலெக்டர் பிரபாகர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது கலெக்டரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) ஸ்டீபன் ஜெயசந்திரன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சாந்தி, முருகன், பெல் நிறுவன பொறியாளர்கள் ராஜீ, மகேஷ் மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.


Next Story