ராணிப்பேட்டை அருகே காரில் மணல் கடத்தல்: தப்பி ஓடியவர்களுக்கு வலைவீச்சு


ராணிப்பேட்டை அருகே காரில் மணல் கடத்தல்: தப்பி ஓடியவர்களுக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 30 Nov 2019 11:45 PM GMT (Updated: 2 Dec 2019 12:58 PM GMT)

ராணிப்பேட்டை அருகே காரில் மணல் கடத்தியவர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

ராணிப்பேட்டை,

ராணிப்பேட்டையை அடுத்த தெங்கால் அருகே சிப்காட் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அருண்ராஜ்குமார் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக கார் ஒன்று வேகமாக வந்தது. போலீசார் அந்த காரை நிறுத்திய போது காரில் இருந்தவர்கள் காரை நிறுத்திவிட்டு தப்பி ஓடிவிட்டனர்.

இதனையடுத்து போலீசார் காரை சோதனை செய்த போது காரின் உள்புறத்திலும், பின்பகுதியிலும் 10 மூட்டைகளில் பாலாற்றில் இருந்து மணல் கடத்தி வந்தது தெரியவந்தது.

அதைத் தொடர்ந்து போலீசார் மணல் மூட்டைகளுடன் காரை பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, தப்பி ஓடியவர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Next Story