கந்தம்பாளையம் அருகே கல்லூரி பஸ் மோதி மூதாட்டி சாவு டிரைவர் கைது


கந்தம்பாளையம் அருகே கல்லூரி பஸ் மோதி மூதாட்டி சாவு டிரைவர் கைது
x
தினத்தந்தி 7 Dec 2019 10:15 PM GMT (Updated: 7 Dec 2019 8:58 PM GMT)

கந்தம்பாளையம் அருகே, கல்லூரி பஸ் மோதி மூதாட்டி இறந்தார். இது தொடர்பாக டிரைவர் கைது செய்யப்பட்டார்.

கந்தம்பாளையம்,

பரமத்தி வட்டம் கந்தம் பாளையம் அருகே உள்ள வசந்தபுரத்தில் குடியிருந்து வந்தவர் கண்ணம்மாள் (வயது 70). இவர் தனது வீட்டில் இருந்து கடைக்கு செல்ல வேண்டி, திருச்செங்கோடு - பரமத்தி செல்லும் மெயின் ரோட்டில் வசந்தபுரத்தில் தார்சாலையை கடக்க முயன்றார்.

அப்போது கரூரில் இருந்து வந்த கரூர் எம்.குமாரசாமி என்ஜினீயரிங் கல்லூரி பஸ் அவர் மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் நாமக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

பரிதாப சாவு

அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலன் அளிக்காமல் அவர் பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து நல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, கல்லூரி பஸ் டிரைவர் பரமத்தியை சேர்ந்த கனகராஜ் (54) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story