மேலூர் அருகே, ஒரு தலையாக காதலித்த வாலிபரின் தொல்லையால் இளம்பெண் தற்கொலை - 5 பேர் கைது


மேலூர் அருகே, ஒரு தலையாக காதலித்த வாலிபரின் தொல்லையால் இளம்பெண் தற்கொலை - 5 பேர் கைது
x
தினத்தந்தி 7 Dec 2019 10:45 PM GMT (Updated: 7 Dec 2019 10:30 PM GMT)

ஒரு தலையாக காதலித்த வாலிபரின் தொல்லையால் மனமுடைந்த இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

மேலூர், 

மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள தும்பைப்பட்டியை சேர்ந்தவர் சேவுகன். இவரது மகள் திவ்யா(வயது 21). இவரை அதே ஊரை சேர்ந்த சின்னழகு என்பவரின் மகன் அஜித்(25) ஒரு தலையாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்தநிலையில் திவ்யாவுக்கு அவரது பெற்றோர் வேறு இடத்தில் திருமண ஏற்பாடுகள் செய்தனர். ஆனால் அஜித் மற்றும் அவரது உறவினர்கள் சிலர்் திவ்யாவின் திருமண ஏற்பாட்டிற்கு இடையூறு செய்து வந்ததாக தெரியவருகிறது.

இதனால் மனமுடைந்த திவ்யா, விஷம் குடித்து மயங்கி விழுந்தார். அவரை மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்்சைக்காக சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார்.

இதுகுறித்து மேலூர் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அஜித், அவரது தந்தை சின்னழகு(49) மற்றும் உறவினர்கள் பஞ்சு, சித்ரா, ஆதினமிளகி ஆகிய 5 பேரை கைது செய்தனர் .

Next Story