உள்ளாட்சி தேர்தல்: ஈரோடு மாவட்டத்தில் 2-வது நாளில் 96 பேர் வேட்பு மனு தாக்கல்


உள்ளாட்சி தேர்தல்: ஈரோடு மாவட்டத்தில் 2-வது நாளில் 96 பேர் வேட்பு மனு தாக்கல்
x
தினத்தந்தி 10 Dec 2019 10:15 PM GMT (Updated: 10 Dec 2019 8:00 PM GMT)

உள்ளாட்சி தேர்தலையொட்டி ஈரோடு மாவட்டத்தில் 2-வது நாளில் 96 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.

ஈரோடு, 

ஈரோடு மாவட்டத்தில் மாவட்ட ஊராட்சிக்குழு கவுன்சிலர் பதவிகள் 19, ஒன்றியக்குழு கவுன்சிலர் பதவிகள் 183, ஊராட்சி மன்ற தலைவர் பதவிகள் 225, ஊராட்சி வார்டு கவுன்சிலர் பதவிகள் 2 ஆயிரத்து 97 என 2 ஆயிரத்து 524 பதவிகளுக்கு தேர்தல் நடக்கிறது.

இதையொட்டி நேற்று முன்தினம் வேட்பு மனு தாக்கல் தொடங்கியது. முதல் நாளில் 100 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். 2-வது நாளான நேற்று 96 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.

கிராம ஊராட்சி வார்டு கவுன்சிலர் பதவிக்கு, ஒன்றியம் வாரியாக தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுக்கள் எண்ணிக்கை விவரம் வருமாறு:-

ஈரோடு -இல்லை, மொடக்குறிச்சி -6, கொடுமுடி -1, பெருந்துறை - 5, சென்னிமலை - 13. அம்மாபேட்டை - 5, அந்தியூர் - 12, பவானி - 8, கோபி - 2, நம்பியூர் - 6, டி.என்.பாளையம் - 9, சத்தியமங்கலம் - 1, பவானிசாகர் - 4, தாளவாடி - 1.

இவ்வாறு 14 ஒன்றியங்களிலும் கிராம ஊராட்சி வார்டு கவுன்சிலர் பதவிக்கு 73 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர்.

கிராம ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு பெருந்துறை மற்றும் சென்னிமலை ஒன்றியங்களில் தலா 5 பேரும், பவானிசாகர் ஒன்றியத்தில் 3 பேரும், ஈரோடு, மொடக்குறிச்சி, அம்மாபேட்டை, அந்தியூர் ஆகிய ஒன்றியங்களில் தலா 2 பேரும், கொடுமுடி ஒன்றியத்தில் ஒருவர் என மொத்தம் 22 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர். ஒன்றியக்குழு கவுன்சிலர் பதவிக்கு கோபி ஒன்றியத்தில் ஒருவர் மட்டும் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். அதன்படி ஈரோடு மாவட்டத்தில் நேற்று மொத்தம் 96 பேர் வேட்புமனு தாக்கல் செய்து உள்ளனர். கடந்த 2 நாட்களில் 196 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story