கிரு‌‌ஷ்ணகிரியில் ஊராட்சி மன்ற தலைவர்கள், துணைத் தலைவர்களுக்கான பயிற்சி முகாம் கலெக்டர் தொடங்கி வைத்தார்


கிரு‌‌ஷ்ணகிரியில் ஊராட்சி மன்ற தலைவர்கள், துணைத் தலைவர்களுக்கான பயிற்சி முகாம் கலெக்டர் தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 23 Jan 2020 11:00 PM GMT (Updated: 23 Jan 2020 10:25 PM GMT)

கிரு‌‌ஷ்ணகிரியில் ஊராட்சி மன்ற தலைவர்கள், துணைத் தலைவர்களுக்கான பயிற்சி முகாமை கலெக்டர் பிரபாகர் தொடங்கி வைத்தார்.

கிரு‌‌ஷ்ணகிரி,

கிரு‌‌ஷ்ணகிரியில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறைக்கு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஊராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் ஊராட்சி மன்ற துணைத் தலைவர்களுக்கான ஒருநாள் சிறப்பு அறிமுக பயிற்சி முகாம் நேற்று நடந்தது. இந்த பயிற்சி முகாமை கலெக்டர் பிரபாகர் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.

ஊரக வளர்ச்சி முகமை இணை இயக்குனர் பெரியசாமி, ஊரக வளர்ச்சி இணை இயக்குனர் அய்யப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) ஹரிஹரன் அனைவரையும் வரவேற்றார்.

நிகழ்ச்சியில் கலெக்டர் பிரபாகர் பேசியதாவது:-

திறம்பட நடத்த வேண்டும்

மாவட்டத்தில் 333 ஊராட்சிகளில் உள்ள ஊராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் துணைத்தலைவர்களுக்கு ஒரு நாள் சிறப்பு அறிமுக பயிற்சி நடைபெறுகிறது. அரசியலமைப்பு ஆணைகள், உள்ளாட்சிக்கான நிர்வாக அதிகாரம் அரசால் செயல்படுத்தப்படும் முதன்மை திட்டங்கள் மற்றும் சட்ட திட்டங்களை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும்.

பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளான தெருவிளக்கு, குடிநீர் வினியோகம், பிளாஸ்டிக் ஒழிப்பு, மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகள், சுகாதார பணிகள் போன்ற கிராமத்தில் செய்ய வேண்டிய பணிகள் குறித்து அனைத்து அலுவலர்கள் தெரிவிக்கும் ஆலோசனைகளை பெற்று ஊராட்சி நிர்வாகத்தை திறம்பட நடத்த வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இதில் சுகாதார பணிகள் துணை இயக்குனர் கோவிந்தன், முதன்மை பயிற்றுனர்கள் ரங்கநாதன், அச்சுதன், உதவி திட்ட அலுவலர் ‌‌ஷகிலா, மாவட்ட ஊராட்சி செயலாளர் சாந்தா, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சாந்தி, உமா மகேஸ்வரி, வேடியப்பன், சிவகுமார் மற்றும் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அலுவலர்கள், ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்ட அலுவலர்கள், காவேரிப்பட்டணம், கிரு‌‌ஷ்ணகிரி, வேப்பனப்பள்ளி ஒன்றியத்தை சேர்ந்த ஊராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் துணைத்தலைவர்கள் கலந்து கொண்டனர்.

Next Story