மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதி விவசாயி பலி


மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதி விவசாயி பலி
x
தினத்தந்தி 3 Feb 2020 9:30 PM GMT (Updated: 3 Feb 2020 12:47 PM GMT)

ஜோலார்பேட்டை அருகே மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதியதில் விவசாயி பலியானார்.

ஜோலார்பேட்டை, 

ஜோலார்பேட்டை அருகே மண்டலவாடி அண்ணா நகரை சேர்ந்தவர் முத்து (வயது 60), விவசாயி. இவர் நேற்று குன்னத்தூர் நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் இவரது மோட்டார்சைக்கிள் மீது நேருக்கு நேர் மோதியது.

இதில் முத்து, மற்றொரு மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த மண்டலவாடியை சேர்ந்த லட்சுமணன் ஆகிய 2 பேரும் படுகாயம் அடைந்தனர். அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் 2 பேரையும் மீட்டு, சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முத்துவை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினர். லட்சுமணனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து ஜோலார்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story