கொழும்பு, துபாயில் இருந்து கடத்தல்: சென்னை விமான நிலையத்தில் ரூ.91 லட்சம் தங்கம் பறிமுதல் பெண் கைது
சென்னை விமான நிலையத்திற்கு கொழும்பு, துபாயில் இருந்து கடத்தி வந்த ரூ.91 லட்சம் மதிப்புள்ள 2 கிலோ தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக சென்னையை சேர்ந்த பெண் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
ஆலந்தூர்,
அதேபோல் துபாயில் இருந்து வந்த விமானத்தில் பயணம் செய்த சென்னையை சேர்ந்த ஜெனிதா (40) என்பவரை சந்தேகத்தின் பேரில், அதிகாரிகள் நிறுத்தி விசாரித்தனர்.
அப்போது அவரது மேலாடை மற்றும் பேண்ட்டில் தங்கச்சங்கிலி, வளையல்கள், கைச்சங்கிலி ஆகியவற்றை மறைத்து வைத்து கடத்தி வந்ததை கண்டுபிடித்தனர். அவரிடம் இருந்து ரூ.34 லட்சத்து 97 ஆயிரம் மதிப்புள்ள 803 கிராம் தங்கத்தை கைப்பற்றினார்கள்.
ஆக மொத்தம் 4 பேரிடம் இருந்து ரூ.91 லட்சத்து 18 ஆயிரம் மதிப்புள்ள 2 கிலோ 95 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்தனர்.
இது தொடர்பாக சென்னையை சேர்ந்த ஜெனிதா என்ற பெண் கைது செய்யப்பட்டார். சிலர்களிடம் தங்கத்தை யாருக்காக கடத்தி வந்தனர்?. அதற்கு காரணமானவர்கள் யார்? என்பது குறித்து சுங்க இலாகா அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story