மறைந்த தி.மு.க. பொதுச்செயலாளருக்கு அஞ்சலி மாவட்டத்தில்


மறைந்த தி.மு.க. பொதுச்செயலாளருக்கு அஞ்சலி மாவட்டத்தில்
x
தினத்தந்தி 7 March 2020 10:30 PM GMT (Updated: 7 March 2020 10:06 PM GMT)

மறைந்த தி.மு.க. பொதுச்செயலாளருக்கு சேலம் மாவட்டத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டது.

சேலம்,

தி.மு.க. பொதுச்செயலாளர் பேராசிரியர் அன்பழகன் உடல்நலக்குறைவால் நேற்று முன்தினம் மரணமடைந்தார். இவருக்கு சேலம் மாவட்டம் ஆத்தூர் ராணிப் பேட்டையில் நகர தி.மு.க. செயலாளர் பாலசுப்பிரமணியம் தலைமையில், அன்பழகன் உருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் நிர்வாகி பன்னீர்செல்வம், முன்னாள் கவுன்சிலர்கள் கமால் பா‌ஷா, காசியம்மாள், ஸ்டாலின், வேலுமணி மற்றும் நிர்வாகி பர்க்கத் அலி, துரை பாஸ்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதேபோல் நரசிங்கபுரம் நகர தி.மு.க. அலுவலகம் முன்பு அலங்கரிக்கப்பட்ட அன்பழகன் உருவப்படத்திற்கு நகர தி.மு.க. செயலாளர் வேல்முருகன், முன்னாள் கவுன்சிலர் பிரகா‌‌ஷ் புலித்தேவன், நகர துணை செயலாளர் மனோகரன் உள்பட நிர்வாகிகள் அஞ்சலி செலுத்தினர். மேலும் அப்பமா சமுத்திரம் கிராமத்தில் ஒன்றிய செயலாளர் செழியன் தலைமையில் அஞ்சலி செலுத்தப்பட்டது.

ஓமலூர்

ஓமலூர் ஒன்றிய நகர தி.மு.க. சார்பில் ஓமலூர் பஸ்நிலையம் அண்ணா சிலை அருகே அன்பழகன் படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது. இதையடுத்து ஓமலூர் அண்ணா சிலையில் இருந்து தொடங்கி முக்கிய வீதி வழியாக மவுன ஊர்வலம் நடைபெற்றது.

இதில் ஓமலூர் ஒன்றிய செயலாளர்கள் செல்வகுமரன், ராஜஅய்யப்பன், குப்புசாமி, நகர செயலாளர் ரவிசந்திரன், மாவட்ட துணை செயலாளர் திருநாவுகரசு, மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் கருணாகரன், மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் அருண் பிரசன்னா, மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் மதிவாணன், மாநில பொதுக்குழு உறுப்பினர் பாலசுப்பிரமணியம், ஒன்றிய கவுன்சிலர்கள் சிவஞானவேல், கோபால்சாமி, அருண் பாலாஜி, ஒன்றிய பொதுககுழு உறுப்பினர் ஜெயவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தலைவாசல்

தலைவாசல் ஒன்றிய அலுவலகம் எதிரில் தி.மு.க. ஒன்றிய பொறுப்பாளர் பழனிசாமி தலைமையில் அன்பழகனுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் முன்னாள் எம்.எல்.ஏ. குணசேகரன், தலைவாசல் முன்னாள் ஒன்றிய செயலாளர் அரங்கசாமி, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் தேவேந்திரன், சின்ன பையன் கிரு‌‌ஷ்ணன், முன்னாள் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் சந்திரன், தன்ராஜ், தி.மு.க. பிரமுகர்கள் பிச்சமுத்து, வெங்கடேசன், ராமர், செங்கமலை உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story