சாராயம் விற்றவர் குண்டர் சட்டத்தில் கைது


சாராயம் விற்றவர் குண்டர் சட்டத்தில் கைது
x
தினத்தந்தி 13 March 2020 9:30 PM GMT (Updated: 13 March 2020 11:21 AM GMT)

செங்கம் தாலுகா புதுப்பாளையத்தை சேர்ந்தவர் ஜெயராஜ் (வயது 35). இவர் சாராயம் விற்ற போது செங்கம் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.

செங்கம், 

ஜெயராஜ் மீது சாராய விற்பனை தொடர்பாக பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதால் அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்யக்கோரி திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிபிசக்ரவர்த்தி மாவட்ட கலெக்டர் கே.எஸ்.கந்தசாமிக்கு பரிந்துரை செய்தார்.

இதையடுத்து கலெக்டர் உத்தரவின் பேரில் ஜெயராஜ் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். 

Next Story