பல்லடம் அருகே பனியன் நிறுவன தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை


பல்லடம் அருகே பனியன் நிறுவன தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 18 April 2020 9:30 PM GMT (Updated: 18 April 2020 8:47 PM GMT)

பல்லடம் அருகே பனியன் நிறுவன தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

பல்லடம்,

தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு நடு காவேரியை சேர்ந்தவர் ஆரோக்கியதாஸ் மகன் வினோத் (வயது 24). இவர் பல்லடம் அருகே உள்ள அருள்புரத்தில் தனியார் பனியன் சலவை நிறுவனத்தில் கடந்த ஒரு வருடமாக வேலை பார்த்து வந்தார். இதற்காக அங்குள்ள பனியன் நிறுவனத்தின் விடுதியில் தங்கியிருந்தார்.

இந்த நிலையில் நேற்று காலை விடுதி சமையலறையில் பனியன் துணியால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். உடன் வேலை செய்பவர்கள் அளித்த தகவலை அடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற பல்லடம் போலீசார் வினோத்தின் உடலை கைப்பற்றி பல்லடம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வினோத் தற்கொலை செய்துகொண்டதற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story