கிருஷ்ணகிரியில் ரேஷன் கடையில் கலெக்டர் ஆய்வு


கிருஷ்ணகிரியில் ரேஷன் கடையில் கலெக்டர் ஆய்வு
x
தினத்தந்தி 27 April 2020 11:30 PM GMT (Updated: 27 April 2020 8:16 PM GMT)

கிருஷ்ணகிரியில் ரேஷன் கடையில் கலெக்டர் ஆய்வு செய்தார்.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனா தடுப்பு பணிகள் நடந்து வருகிறது. அதன்படி கிருஷ்ணகிரி மாவட்டம் கட்டிகானப்பள்ளி ஊராட்சி ராஜாஜி நகரில் செயல்பட்டு வரும் ரேஷன் கடையில் குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவசமாக பொருட்கள் வழங்கப்படுவது குறித்தும், சமூக இடைவெளியை கடைபிடித்து பொதுமக்கள் பொருட்களை வாங்கி செல்கிறார்களா? எனவும் கலெக்டர் பிரபாகர் ஆய்வு செய்தார்.

தொடர்ந்து ஒளிரும் கிருஷ்ணகிரி அமைப்பு சார்பில் வருவாய்த்துறை, காவல் துறை, ஊர்காவல் படை, ஊரக வளர்ச்சி துறையில் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபடும் அலுவலர்களுக்கு நாள்தோறும் 750 பேருக்கு மதியம் மற்றும் இரவு உணவு தயார் செய்து வழங்கும் பணிகளை பார்வையிட்டார். மேலும் கிருஷ்ணகிரி நகராட்சி அரசு மருத்துவமனை அருகில் உள்ள அம்மா உணவகத்தில் ஒரு வேளைக்கு 500 பேருக்கு உணவு தயாரித்து வழங்கப்படும் பணிகளை பார்வையிட்டு அம்மா உணவக பணியாளர்களிடம் கேட்டறிந்தார். இந்த ஆய்வின் போது உதவி கலெக்டர் தெய்வநாயகி, நகராட்சி ஆணையாளர் சந்திரா, செய்தி-மக்கள் தொடர்பு அலுவலர் சேகர், சுகாதார ஆய்வாளர் மோகன சுந்தரம், ஒளிரும் கிருஷ்ணகிரி அமைப்பு நிர்வாகி ஆனந்த குமார், வருவாய் ஆய்வாளர் தசரதன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

Next Story