குடிபோதையில் தகராறு: வாலிபர் அடித்துக்கொலை கணவன்-மனைவி உள்பட 3 பேர் கைது


குடிபோதையில் தகராறு: வாலிபர் அடித்துக்கொலை கணவன்-மனைவி உள்பட 3 பேர் கைது
x

குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் வாலிபர் அடித்துக்கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக கணவன்-மனைவி உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

திருவாரூர், 

குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் வாலிபர் அடித்துக்கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக கணவன்-மனைவி உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

குடிபோதையில் தகராறு

திருவாரூர் அருகே உள்ள மாவூர் ஆற்றங்கரை தெருவை சேர்ந்தவர் காளியப்பன். இவருடைய மகன் ராஜ்குமார்(வயது 23). இவர் நேற்று முன்தினம் மதியம் தனது உறவினர் பின்னவாசல் பள்ளிக்கூடத் தெருவை சேர்ந்த முருகேசன்(45) என்பவருடன் சேர்ந்து மது குடித்தார். அப்்போது குடிபோதையில் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

இதனையடுத்து ராஜ்குமார் தனது வீட்டிற்கு சென்று விட்டார். அன்று இரவு ராஜ்குமார் தன்னுடன் தகராறு செய்த முருகேசன் வீட்டிற்கு சென்றார். அப்போது இருவருக்கும் இடையே தகராறு முற்றியது.

அடித்துக்கொலை

இதில் ஆத்திரமடைந்த முருகேசன், அவருடைய மனைவி மாரியம்மாள்(35), உறவினர் பாஸ்கரன்(55) ஆகிய 3 பேரும் சேர்ந்து கட்டையால் ராஜ்குமாரை தாக்கினர். இதில் காயம் அடைந்த ராஜ்குமார், மயக்க நிலையில் தனது வீட்டிற்கு வந்து படுத்து விட்டார். நேற்று அதிகாலையில் ராஜ்குமாரின் மனைவி வெள்ளையம்மாள், அவரை எழுப்பியபோது அவர் இறந்து விட்டது தெரி யவந்தது.

இதுகுறித்து தகவல் அறிந்த திருவாரூர் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ராஜ்குமார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் முருகேசன், அவருடைய மனைவி மாரியம்மாள், உறவினர் பாஸ்கரன் ஆகிய 3 பேரும் சேர்ந்து அடித்ததில் ராஜ்குமார் இறந்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

Next Story