10-ம் வகுப்பு மாணவர்கள் தேர்வு மையத்துக்கு வர இ-பாஸ் வசதி அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி


10-ம் வகுப்பு மாணவர்கள் தேர்வு மையத்துக்கு வர இ-பாஸ் வசதி அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி
x
தினத்தந்தி 17 May 2020 5:35 AM GMT (Updated: 17 May 2020 5:35 AM GMT)

10-ம் வகுப்பு மாணவர்கள் தேர்வு மையத்துக்கு வர இ-பாஸ் வசதி செய்யப்பட்டுள்ளது என்று அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார்.

ஈரோடு,

10-ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு அந்தந்த பள்ளிகளிலேயே தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 12 ஆயிரம் பள்ளிகளும் தேர்வு மையங்களாக மாறும். அனைத்து தேர்வு மையங்களையும் அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் ஆய்வு செய்வார்கள். ஒரு வகுப்பறைக்கு 10 மாணவர்கள் மட்டுமே தேர்வு எழுத அனுமதிக்கப்படுவார்கள். தனியார் பள்ளிகளில் அரசு பள்ளி ஆசிரியர்களும், அதேபோல் அரசு பள்ளியில் தனியார் பள்ளி ஆசிரியர்களும் பணிபுரிவார்கள்.

மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் தேர்வு நுழைவு சீட்டு வழங்குவதற்கான ஏற்பாடு நடைபெற்று வருகிறது. வெளி மாவட்டங்களில் உள்ள தனியார் பள்ளி மாணவர்களை 3 நாட்களுக்கு முன்பே அழைத்து வந்து தனியார் பள்ளி விடுதிகளில் தங்க வைத்து தேர்வு எழுத ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இ-பாஸ் வசதி

மாணவர்கள் தேர்வு மையங் களுக்கு வருவதற்கு இ-பாஸ் வசதி பெற கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளன. தேர்வு மையங்களில் முறையான சுகாதார பணிகள் மேற்கொள்ளப்படும். மாணவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்து தரப்படும்.

இவ்வாறு அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.

Next Story