ஏரியில் குடிமராமத்து பணிகள் ; கலெக்டர் தொடங்கி வைத்தார்


ஏரியில் குடிமராமத்து பணிகள் ; கலெக்டர் தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 29 May 2020 3:45 AM GMT (Updated: 29 May 2020 3:45 AM GMT)

கச்சிராயப்பாளையம் அருகே ஏரியில் குடிமராமத்து பணிகளை கலெக்டர் கிரண்குராலா தொடங்கி வைத்தார்

கச்சிராயப்பாளையம்,

கள்ளக்குறிச்சி மாவட்டம் கச்சிராயப்பாளையம் அருகே காரனூர் கிராமத்தில் பெரிய ஏரி உள்ளது. இந்த ஏரி மூலம் 200 ஏக்கருக்கு மேற்பட்ட விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது. இந்த ஏரி தூர்ந்து போனதோடு, மதகுகளும் சேதமடைந்தது. இதனால் மழைக்காலங்களில் ஏரியில் அதிக அளவில் தண்ணீர் தேக்கி வைக்கமுடியாத நிலை ஏற்பட்டது.

இதையடுத்து விவசாயிகள் விடுத்த கோரிக்கையை ஏற்று பெரிய ஏரியில் ரூ.50 லட்சம் மதிப்பில் குடிமராமத்து பணிகளை மேற்கொள்ள தமிழக அரசு நிதி ஒதுக்கியது. இதற்கான தொடக்க நிகழ்ச்சி நேற்று முன்தினம் நடந்தது. நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் கிரண்குராலா தலைமை தாங்கி குடிமராமத்து பணியை தொடங்கி வைத்தார். இதையடுத்து ஏரியை தூர்வாரி மதகுகளை சீரமைக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிகழ்ச்சியில் பிரபு எம்.எல்.ஏ., தமிழ்நாடு கூட்டுறவு சர்க்கரை ஆலைகளின் இணைய தலைவர் ராஜசேகர், சின்னசேலம் ஒன்றிய குழு முன்னாள் தலைவர் ராஜேந்திரன், காரனூர் ஏரி பாசன சங்க தலைவரும், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவருமான ராமச்சந்திரன், பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் பிரபு, கணேசன் மற்றும் விவசாயிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story