காஞ்சீபுரம் மாவட்டத்தில் கொரோனா தொற்று பலி எண்ணிக்கை 300-ஐ நெருங்குகிறது


காஞ்சீபுரம் மாவட்டத்தில் கொரோனா தொற்று பலி எண்ணிக்கை 300-ஐ நெருங்குகிறது
x
தினத்தந்தி 22 Sep 2020 12:40 AM GMT (Updated: 22 Sep 2020 12:40 AM GMT)

காஞ்சீபுரம் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 117 பேர் பாதிக்கப்பட்டனர். பலி எண்ணிக்கை 300-ஐ நெருங்குகிறது.

படப்பை,

காஞ்சீபுரம் மாவட்டம் படப்பை ஊராட்சி பகுதியை சேர்ந்த 23, 54, வயதுடைய பெண்கள் 59 வயது ஆண், கீழ்ப்படப்பை பகுதியை சேர்ந்த 49, 54 வயதுடைய பெண்கள் 53, 30 வயதுடைய ஆண்கள், மாடம்பாக்கம் பகுதியை சேர்ந்த 37 வயதுடைய ஆண், வரதராஜபுரம் பகுதியை சேர்ந்த 58 வயதுடைய பெண் ஆகியோருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் தொற்று இருப்பது உறுதியானது.

இதனால் மாவட்டத்தில் நேற்று மட்டும் 117 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 20 ஆயிரத்து 594 ஆக உயர்ந்து உள்ளது. இவர்களில் 19 ஆயிரத்து 235 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். நேற்று ஒரே நாளில் 4 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதனால் காஞ்சீபுரம் மாவட்டத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 298 ஆக உயர்ந்தது. ஆயிரத்து 61 பேர் தொடர்ந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 212 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதுவரையில் மாவட்டம் முழுவதும் 30 ஆயிரத்து 352 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 28 ஆயிரத்து 110 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். ஆயிரத்து 720 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் இதுவரையில் 522 பேர் கொரோனா வைரஸ் பாதிப்பால் இறந்துள்ளனர்.

செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு உட்பட்ட தாயுமானவர் தெருவில் வசிக்கும் 48 வயது ஆண், ஒத்திவாக்கம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு உட்பட்ட கண்டிகை விக்னேஷ்வர நகரில் வசிக்கும் 37 வயது பெண், கொளப்பாக்கம் பகுதியில் வசிக்கும் 23 வயது இளம்பெண், நந்திவரம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு உட்பட்ட மண்ணிவாக்கம் கருமாரியம்மன் நகர் பகுதியில் வசிக்கும் 45 வயது ஆண், தங்கவேல் நகரை சேர்ந்த 25 வயது இளம்பெண், கூடுவாஞ்சேரி சீனிவாசபுரம் கே.கே. நகரை சேர்ந்த 18 வயது இளம்பெண் உள்பட செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று 219 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 32 ஆயிரத்து 799 ஆக உயர்ந்து உள்ளது. இவர்களில் 29 ஆயிரத்து 852 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். நேற்று ஒரே நாளில் 6 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதனால் செங்கல்பட்டு மாவட்டத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 523 ஆக உயர்ந்தது. 2 ஆயிரத்து 424 பேர் தொடர்ந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Next Story