திருமக்கோட்டை அருகே கல்லூரி மாணவியை தாக்கி நகை பறிப்பு உறவினர் கைது


திருமக்கோட்டை அருகே கல்லூரி மாணவியை தாக்கி நகை பறிப்பு உறவினர் கைது
x
தினத்தந்தி 29 Oct 2020 4:25 AM GMT (Updated: 29 Oct 2020 4:25 AM GMT)

திருமக்கோட்டை அருகே கல்லூரி மாணவியை தாக்கி நகை பறித்த உறவினரை போலீசார் கைது செய்தனர்.

திருமக்கோட்டை,

திருவாரூர் மாவட்டம், திருமக்கோட்டை அருகே உள்ள மான்கோட்டை நத்தம் கிராமத்தை சேர்ந்தவர் பாஸ்கர். இவரது மகள் மோனிஷா (வயது21). இவர் மன்னார்குடி அரசு கலைக்கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வருகிறார். கொரோனா ஊரடங்கால் கல்லூரி மூடப்பட்டுள்ளதால் ஆன்லைன் வகுப்பில் படித்து வருகிறார். இவரது உறவினர் பாலையக்கோட்டை தோப்புத்தெருவை சேர்ந்த வசந்த ராஜ். இவர் சிங்கப்பூரில் வேலை பார்த்து வந்தார்.

நகை பறிப்பு

இந்தநிலையில் கடந்த 1 மாதத்திற்கு முன்பு சொந்த ஊருக்கு வந்துள்ளார். சம்பவத்தன்று மோனிஷா வீட்டிற்கு வசந்த்ராஜ் வந்துள்ளார். அப்போது வீட்டில் யாரும் இல்லாததை அறிந்த வசந்த்ராஜ், மோனிஷாவை தாக்கி அவர் கழுத்தில் கிடந்த 1 பவுன் நகையை பறித்து சென்றுவிட்டார். இதில் காயமடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் மன்னார்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து பாஸ்கர் திருமக்கோட்டை போலீசில் கொடுத்த புகாரின் பேரில் திருமக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து வசந்த்ராஜை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story