சோனியா காந்தி பிறந்த நாள் விழா காங்கிரசார் நலத்திட்ட உதவி


சோனியா காந்தி பிறந்த நாள் விழா காங்கிரசார் நலத்திட்ட உதவி
x
தினத்தந்தி 10 Dec 2020 4:13 AM GMT (Updated: 10 Dec 2020 4:13 AM GMT)

குமரி மாவட்டத்தில் சோனியாகாந்தி பிறந்தநாள் விழாவையொட்டி காங்கிரசார் நலத்திட்ட உதவி வழங்கி கொண்டாடினர்.

நாகர்கோவில்,

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் பிறந்த நாள் விழா நேற்று குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் மார்த்தாண்டம், காஞ்சிரகோட்டில் கொண்டாடப்பட்டது. இதற்கு மாவட்ட தலைவர் ராஜேஷ் குமார் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார்.

இதில் துணைத் தலைவர் பால்மணி, ராஜீவ் காந்தி பஞ்சாயத்து ராஜ் சங்கதன் தலைவர் டாக்டர் சாமுவேல் ஜார்ஜ், சிறுபான்மை பிரிவு தலைவர் செல்வகுமார், மாநில ஒழுங்கு நடவடிக்கை குழு உறுப்பினர் டாக்டர் தம்பி விஜயகுமார், கொல்லஞ்சி பஞ்சாயத்து தலைவர் சலோமி, மாவட்ட செயலாளர்கள் ஐ.ஜி.பி. லாரன்ஸ், சிறுபான்மை பிரிவு வட்டார தலைவர் ஜான் வெர்ஜின் மற்றும் மாவட்ட, நகர வட்டார நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இலவச தையல் எந்திரங்கள்

இந்த விழாவில் 12 ஏழை பெண்களுக்கு இலவச தையல் எந்திரங்களை ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. வழங்கி பேசினார்.

அப்போது அவர், சோனியா காந்தியின் பிறந்த நாளை முன்னிட்டு மேற்கு மாவட்டத்தில் உள்ள நகர மற்றும் வட்டாரங்களில் நல உதவிகள் வழங்கியதாகவும், மும்மத பிரார்த்தனை நடந்ததாகவும் கூறினார்.

பிரின்ஸ் எம்.எல்.ஏ.

சோனியா காந்தியின் பிறந்த நாளை முன்னிட்டு நேற்று குளச்சல் அரசு மருத்துவமனையில் பிறந்த பெண் குழந்தைக்கு பிரின்ஸ் எம்.எல்.ஏ. தங்க மோதிரம் வழங்கினார். மேலும் மருத்துவமனையில் இருந்த உள் நோயாளிகளுக்கு ரொட்டியும் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சிக்கு நகர காங்கிரஸ் தலைவர் சந்திரசேகர் தலைமை தாங்கினார். இதில் நிர்வாகிகள் விஜிலியஸ், சாமுவேல் சேகர், யூசுப்கான், கே.டி.உதயம், முனாப், தர்மராஜ், எனல்ராஜ், சபீன், லாரன்ஸ் உள்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

நலத்திட்ட உதவி

குமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் சோனியா காந்தி பிறந்த நாள் விழா நேற்று நடந்தது. இதையொட்டி டதி பெண்கள் பள்ளி சந்திப்பில் உள்ள ராஜீவ்காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சிக்கு மாவட்ட தலைவர் ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார். மாவட்ட துணை தலைவர் மகேஷ்லாசர், நிர்வாகிகள் அலெக்ஸ், ஜெயகுமார், அபிஜித், சிவகுமார், சபிதா உள்பட பலர் கலந்து கொண்டனர். இதே போல மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் காங்கிரசார் சோனியா காந்தி பிறந்த நாளை கொண்டாடினர்.

ஓ.பி.சி. பிரிவு

கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட ஓ.பி.சி. பிரிவு சார்பில் வெட்டூர்ணிமடம் சந்திப்பில் மாவட்ட தலைவர் செல்வமணி தலைமையில் மாநில துணைத்தலைவர் சதீஷ் நலத்திட்ட உதவிகள் வழங்கினார். இதில் காங்கிரஸ் மாவட்ட தலைவர் ராதாகிருஷ்ணன், மாநில செயலாளர் சீனிவாசன், அலெக்ஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

சோனியாகாந்தி பிறந்த நாளையொட்டி அஞ்சுகிராமம் பேரூராட்சி பகுதியில் மாற்றுத்திறனாளி ஒருவருக்கு தனது சொந்த செலவில் மூன்று சக்கர சைக்கிளை விஜய் வசந்த் வழங்கினார். நிகழ்ச்சியில் வட்டார தலைவர் காலபெருமாள், துணைத்தலைவர் சுரேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர். கிழக்கு மாவட்ட சிறுபான்மை பிரிவு சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் சிறுபான்மை பிரிவு மாவட்ட தலைவர் அப்துல் வாஹித், வட்டார தலைவர் ஜான் சவுந்தர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story