கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தினர் மனித சங்கிலி போராட்டம்


கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தினர் மனித சங்கிலி போராட்டம்
x
தினத்தந்தி 16 Dec 2020 1:12 AM GMT (Updated: 16 Dec 2020 1:12 AM GMT)

மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி நேற்று கரூர் ஆர்.எம்.எஸ். தபால் அலுவலகம் முன்பு தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.

கரூர், 

பள்ளர், தேவேந்திர குலத்தான், மூப்பன் உள்ளிட்ட 7 உட்பிரிவுகளை ஒன்றிணைத்து தங்களது சமூகத்தின் பெயரை தேவேந்திரகுல வேளாளர் என மாற்றி அரசாணை உடனடியாக வெளியிட வேண்டும் என மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி நேற்று கரூர் ஆர்.எம்.எஸ். தபால் அலுவலகம் முன்பு தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட தலைவர் மாரியப்பன் தலைமை தாங்கினார். இதில் இணை செயலாளர்கள் இளவழகன், ராஜலிங்கம், சரவணன், இளைஞரணி செயலாளர் பூபாலன் உள்பட பலர் கலந்து கொண்டனர். அப்போது கரூர் ஆர்.எம்.எஸ். தபால் அலுவலகம் முன்பு வரிசையாக கைப்பிடித்து நின்று மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், அவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு கோஷங்கள் எழுப்பினர்.

Next Story