வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி அனைத்து விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்பு குழுவினா் காத்திருப்பு போராட்டம்


வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி அனைத்து விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்பு குழுவினா் காத்திருப்பு போராட்டம்
x
தினத்தந்தி 16 Dec 2020 5:19 AM GMT (Updated: 16 Dec 2020 5:19 AM GMT)

வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி நாகையில், 2-வது நாளாக அனைத்து விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்பு குழுவினா் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

நாகப்பட்டினம்,

மத்தியஅரசு கொண்டு வந்துள்ள வேளாண் அவசர சட்டங்களையும், மின்சார திருத்த சட்ட மசோதாவையும் உடனடியாக திரும்ப பெறக் கோரியும், இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் நாகை அவுரி திடலில் அனைத்து விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்பு குழு சார்பில் ேநற்று முன்தினம் ெதாடா் காத்திருப்பு போராட்டத்ைத ெதாடங்கினா்.

2-வது நாளாக காத்திருப்பு போராட்டம்

நேற்று 2-வது நாளாக காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. போராட்டத்துக்கு தமிழ்நாடு விவசாய சங்க மாநில தலைவர் சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். விவசாய சங்க மாவட்ட செயலாளர் சம்பந்தம், மாவட்ட தலைவர் அம்பிகாபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் நாகை மாலி, விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் பரிமளச்செல்வன், விவசாயிகள் சங்க மாநில குழு உறுப்பினர் சரபோஜி மற்றும் 100 ெபண்கள் உள்பட 500 -க்கும் மேற்பட்ேடார் கலந்து கொண்டனர்.

ரத்து ெசய்ய வேண்டும்

வேளாண் சட்ட திருத்த மசோதாவை திரும்ப பெற வேண்டும். தொழிலாளர் உரிமைகளை பறிக்கும் தொழிலாளர் விரோத சட்டங்களை ரத்து செய்ய வேண்டும். விவசாயத்தை கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு தாரைவார்க்க கூடாது. டெல்லியில் வேளாண் சட்ட திருத்த மசோதாவுக்கு எதிராக போராடும் விவசாயிகளை வஞ்சிக்க கூடாது என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன.

Next Story