நொய்யல் அருகே சாலையோரம் கொட்டப்படும் கழிவு பொருட்களால் சுகாதார கேடு


நொய்யல் அருகே சாலையோரம் கொட்டப்படும் கழிவு பொருட்களால் சுகாதார கேடு
x
தினத்தந்தி 22 Dec 2020 11:50 PM GMT (Updated: 22 Dec 2020 11:50 PM GMT)

நொய்யல் அருகே சாலையோரம் கொட்டப்படும் கழிவு பொருட்களால் சுகாதார கேடு ஏற்பட்டு நோய் பரவு அபாயம் ஏற்பட்டுள்ளது.

நொய்யல்,

கரூர் மாவட்டம், கொடுமுடி-பரமத்திவேலூர் நெடுஞ்சாலையில் நொய்யல் அருகே நடையனூரில் டீக் கடைகள், காய்கறி கடைகள் உள்ளிட்ட கடைகள் உள்ளன. இதேபோல, இப்பகுதியில் திருமண மண்டபமும் உள்ளது. இப்பகுதியில் உள்ள வீடுகளில் சேறும் குப்பைகள், கடைகளில் ேசறும் கழிவு பொருட்கள், திருமண மண்டபத்தில் நிகழ்ச்சிகள் நடக்கும்போது மீதமாகும் உணவுகள், எச்சில் இலைகள் ஆகியவை இச்சாலையோரங்களில் கொட்டப்பட்டு வருகிறது.

சாலையோரம் கொட்டப்படும் உணவுகளை தின்பதற்காக நாய்கள் கூட்டம், கூட்டமாக வருகின்றன. அப்போது நாய்கள் ஒன்றோடு ஒன்று சண்டையிட்டு கொண்டு சாலைக்கு வந்து விடுகின்றன. இதனால், அந்த வழியாக இரு சக்கர வாகனங்களில் செல்பவர்கள் தடுமாறி கீழே விழுந்து காயம் அடைகின்றனர்.

சுகாதார கேடு

ேமலும், தற்போது விட்டு, விட்டு மழை பெய்து வருவதால் கழிவு பொருட்களில் இருந்து துர்நாற்றம் வீசுகிறது. பிளாஸ்டிக் பைகள், கப்புகள் மற்றும் அங்கு தேங்கி கிடக்கும் கழிவு பொருட்களில் மழைநீர் தேங்கி நிற்கிறது. நாளடைவில் அந்த மழைநீரில் புழுக்கள் உற்பத்தியாகிறது.

இதனால், அந்த பகுதியில் சுகாதார கேடு ஏற்பட்டு நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஆகவே, சாலையோரம் கொட்டப்பட்டுள்ள கழிவுபொருட்களை அகற்றவும், இனிமேல் இந்த இடத்தில் குப்பைகள் மற்றும் கழிவு பொருட்களை கொட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முன் வரவேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story