அவினாசியில் வேளாண் சட்ட நகல் எரிப்பு போராட்டம்


அவினாசியில் வேளாண் சட்ட நகல் எரிப்பு போராட்டம்
x
தினத்தந்தி 14 Jan 2021 3:04 AM GMT (Updated: 14 Jan 2021 3:04 AM GMT)

அவினாசியில் நேற்று சேவூர் செல்லும் ரோட்டில் பல்வேறு கட்சியினர் வேளாண் சட்ட நகல் எரிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அவினாசி, 

மத்திய அரசு சில மாதங்களுக்கு முன்பாக புதிய வேளாண் திருத்த மசோ தாவை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியுள்ளது.

இதனை கண்டித்தும், மசோதாவை வாபஸ் பெற வலியுறுத்தியும் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் பல நாட்களாக தலைநகர் டெல்லியில் முகாமிட்டு பல்வேறு கட்டங்களாக போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.

இதற்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக போகிப்பண்டிகையை திருநாளில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சியினர் அவினாசியில் வேளாண் சட்ட நகல் எரித்து கண்டன கோஷமிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கட்சி நிர்வாகிகள்

இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸடு் கட்சி சார்பில் பி.முத்துச்சாமி, விவசாய சங்க மாவட்ட துணை செயலாளர் எஸ்.வெங்கடாசலம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி ஒன்றிய குழு உறுப்பினர் பழனிச்சாமி, இந்திய கம்யூனிஸ்டு கட்சி ஒன்றிய செயலாளர் இஷாக், ஒன்றியக்குழு உறுப்பினர் மோகன், செல்வராஜ் காங்கிரஸ் கட்சி சார்பில் வக்கீல் கோபாலகிருஷ்ணன், மணி,ம.தி.மு.க. சார்பில் சுப்பிரமணி, பாபு, கொங்கு நாடு தேசிய மக்கள் கட்சி சார்பில் லோகநாதன், ராஜ்குமார், தி.மு.க.சார்பில் பழனிச்சாமி, பொன்னுச்சாமி, பால்ராஜ் உட்பட நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

Next Story