விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 3 Feb 2021 12:59 AM GMT (Updated: 3 Feb 2021 1:02 AM GMT)

கள்ளக்குறிச்சியில் விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கள்ளக்குறிச்சி, 

கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு வட்ட செயலாளர் அருள்தாஸ் தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் ஆறுமுகம், தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்க மாநில துணை செயலாளர் ஜோதிராமன், வட்ட தலைவர் சாந்தமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக மாவட்ட செயலாளர் ஸ்டாலின்மணி கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன உரையாற்றினார். பருவமழையால் சேதமடைந்த பயிர்களுக்கு உரிய நிவாரண தொகையை விவசாயிகளுக்கு  உடனே வழங்க வேண்டும், கூட்டுறவு வங்கியில் விவசாயிகள் வாங்கிய கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.

இதில் ஒன்றிய செயலாளர் மணிகண்டன், மாவட்ட துணை செயலாளர் ஏழுமலை, வட்ட செயலாளர்கள் நாகராஜன், பாபு உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story