ஓட்டல் தொழிலாளி திடீர் சாவு
ஓட்டல் தொழிலாளி திடீரென பரிதாபமாக இறந்தார்
ராமநாதபுரம்
பரமக்குடி ஆவரனேந்தல் பகுதியை சேர்ந்தவர் சண்முகநாதன்(வயது 50). இவர் ராமநாதபுரம் வண்டிக்காரத்தெரு பகுதியில் உள்ள ஓட்டல் ஒன்றில் பரோட்டா மாஸ்டராக வேலை பார்த்து வந்தார். வாதநோய் பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வந்த அவர் ஓட்டல் பணி முடிந்ததும் கடையில் படுத்திருப்பதை வழக்கமாக கொண்டிருந்தார். இந்தநிலையில் வழக்கம்போல கடை முடிந்ததும் கடையில் படுத்திருந்தவர் மறுநாள் காலை பணியாளர்கள் வந்தபோது எழுந்திருக்கவில்லை. உடனடியாக அவரை ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்த போது டாக்டர்கள் பரிசோதித்தவிட்டு இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்த புகாரின்பேரில் ராமநாதபுரம் பஜார் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story