மோட்டார் சைக்கிள் தடுப்புசுவரில் மோதி விபத்து; பெயிண்டர் பலி உடன் வந்த நண்பர் படுகாயம்


மோட்டார் சைக்கிள் தடுப்புசுவரில் மோதி விபத்து; பெயிண்டர் பலி உடன் வந்த நண்பர் படுகாயம்
x
தினத்தந்தி 18 Feb 2021 5:14 AM GMT (Updated: 18 Feb 2021 5:14 AM GMT)

வண்டலூர்-மீஞ்சூர் வெளிவட்ட சாலையில் சென்ற மோட்டார் சைக்கிள் தடுப்புசுவரில் மோதி விபத்துக்குள்ளானதில், பெயிண்டர் பலியானார்.

பூந்தமல்லி, 

பூந்தமல்லி அடுத்த நசரத்பேட்டை, குமரன் தெருவைச் சேர்ந்தவர் ஆல்வின் ராஜ் (வயது 21). பெயிண்டராக வேலை செய்து வந்தார். இவரது நண்பர் சந்தானகிருஷ்ணன் (22), கார்பெண்டர் வேலை செய்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இருவரும் குன்றத்தூர் அடுத்த எருமையூர் பகுதியில் மீன்பிடித்து விட்டு இரவு மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தனர்.

வண்டலூர்-மீஞ்சூர் வெளிவட்ட சாலை, மலையம்பாக்கம் அருகே சென்று கொண்டிருந்த போது, திடீரென கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் சாலையின் தடுப்பு சுவரின் மீது மோதியதில் இருவரும் தூக்கி வீசப்பட்டனர்.

சாவு

இதில், தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ஆல்வின் ராஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்து போனார். சந்தானகிருஷ்ணன் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுகுறித்து பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இறந்து கிடந்த ஆல்வின்ராஜ் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை செய்து வருகின்றனர்.

Next Story