வெள்ளகோவில் அருகே நூல் மில்லில் தீ


வெள்ளகோவில் அருகே நூல் மில்லில் தீ
x
தினத்தந்தி 5 March 2021 6:31 PM GMT (Updated: 5 March 2021 6:31 PM GMT)

வெள்ளகோவில் அருகே நூல் மில்லில் தீ

வெள்ளகோவில்:-
வெள்ளகோவில் அருகே உள்ள சின்னாத்திபாளையத்தில் சுகுமார் என்பவருக்கு சொந்தமான நூல் மில் உள்ளது. இந்த மில்லில் நேற்று பகல் 12 மணி அளவில் எந்திரம் உராய்வு காரணமாக பிரேக்கர் எந்திரம் மற்றும் கழிவு பஞ்சில் தீப்பிடித்து எரிய தொடங்கியது. 
உடனே ஊழியர்கள் வெள்ளகோவில் தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்தனர். தீயணைப்பு நிலைய அதிகாரி தனசேகர் மற்றும் போக்குவரத்து அதிகாரி வேலுச்சாமி தலைமையில் தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து சென்று தீ மேலும் பரவாமல்  அணைத்தனர். தீ விபத்தில் எந்திரங்கள் லேசான சேதம் அடைந்ததாகவும், குறைந்த அளவிலான பஞ்சுகள் எரிந்து சேதமானதாகவும் கூறினார்.ஊழியர்கள் அனைவரும் காயமின்றி தப்பினர்.
=========

Next Story