கீரமங்கலத்தில் ரூ.1 லட்சம் பறிமுதல்
கீரமங்கலத்தில் ரூ.1 லட்சம் பறிமுதல்
கீரமங்கலம்
புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் பகுதியில் நேற்று ஆலங்குடி சட்டமன்றத் தொகுதி தேர்தல் பறக்கும்படை அதிகாரி பொன்னழகு தலைமையிலான குழுவினர் அறந்தாங்கி சாலையில் நாலாஞ்சந்தி கருப்பர் கோவில் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே உள்ள சானாகரை கிராமத்தைச் சேர்ந்த ராசமாணிக்கம் மகன் வெங்கடேசன் (வயது 30) ஓட்டி வந்த சரக்கு வேனை சோதனையிட்டபோது டிரைவர் வெங்கடேசனிடம் ரூ.1 லட்சம் இருந்தது. அந்த பணம் கொண்டு செல்வதற்கான ஆவணம் உள்ளதா என்று அதிகாரிகள் கேட்டதற்கு இது குளமங்கலத்தை சேர்ந்த தேங்காய் வியாபாரியின் பணம் என்றும் அதற்கான ரசீது அவரிடம் தான் உள்ளது என்றும் கூறியுள்ளார். அதனை ஏற்காத அதிகாரிகள் அந்த பணத்தை பறிமுதல் செய்து ஆலங்குடி தேர்தல் நடத்தும் உதவி அலுவலர் பொன்மலரிடம் ஒப்படைத்தனர்.
புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் பகுதியில் நேற்று ஆலங்குடி சட்டமன்றத் தொகுதி தேர்தல் பறக்கும்படை அதிகாரி பொன்னழகு தலைமையிலான குழுவினர் அறந்தாங்கி சாலையில் நாலாஞ்சந்தி கருப்பர் கோவில் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே உள்ள சானாகரை கிராமத்தைச் சேர்ந்த ராசமாணிக்கம் மகன் வெங்கடேசன் (வயது 30) ஓட்டி வந்த சரக்கு வேனை சோதனையிட்டபோது டிரைவர் வெங்கடேசனிடம் ரூ.1 லட்சம் இருந்தது. அந்த பணம் கொண்டு செல்வதற்கான ஆவணம் உள்ளதா என்று அதிகாரிகள் கேட்டதற்கு இது குளமங்கலத்தை சேர்ந்த தேங்காய் வியாபாரியின் பணம் என்றும் அதற்கான ரசீது அவரிடம் தான் உள்ளது என்றும் கூறியுள்ளார். அதனை ஏற்காத அதிகாரிகள் அந்த பணத்தை பறிமுதல் செய்து ஆலங்குடி தேர்தல் நடத்தும் உதவி அலுவலர் பொன்மலரிடம் ஒப்படைத்தனர்.
Related Tags :
Next Story