தென்காசியில் வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம்- அலுவலகங்கள் வெறிச்சோடின


தென்காசியில் வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம்- அலுவலகங்கள் வெறிச்சோடின
x
தினத்தந்தி 15 March 2021 9:01 PM GMT (Updated: 15 March 2021 9:01 PM GMT)

தென்காசியில் வங்கி ஊழியர்கள் நேற்று வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால் அலுவலகங்கள் வெறிச்சோடின.

தென்காசி, மார்ச்:
தென்காசியில் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால் அலுவலகங்கள் வெறிச்சோடி காணப்பட்டன.

வேலை நிறுத்தம்

மத்திய அரசின் கொள்கை முடிவான பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்குவதை கண்டித்து வங்கி ஊழியர்கள் நேற்று வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால் வங்கி பணிகள் எதுவும் நடைபெறவில்லை. தென்காசியில் உள்ள வங்கிகளில் பணியாளர்கள்  வேலைக்கு வராததால் அலுவலகங்கள் வெறிச்சோடி காணப்பட்டது. இதனால் தென்காசி மாவட்டத்தில் வங்கிப் பணிகள் எதுவும் நடைபெறவில்லை.

பொதுமக்கள் அவதி

வங்கி ஊழியர்கள் நேற்று வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதால்  பொதுமக்கள் பெரிதும் அவதி அடைந்தனர்.
இன்றும் (செவ்வாய்க்கிழமை) வங்கி ஊழியர்கள் தொடர்ந்து வேலைநிறுத்தத்தில் ஈடுபடுகிறார்கள்.

Next Story