பரிமள ரெங்கநாதர் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா


பரிமள ரெங்கநாதர் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா
x
தினத்தந்தி 20 March 2021 7:06 PM GMT (Updated: 20 March 2021 7:06 PM GMT)

மயிலாடுதுறை திருவிழந்தூர் பரிமள ரெங்கநாதர் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

மயிலாடுதுறை:
மயிலாடுதுறை திருவிழந்தூர் பரிமள ரெங்கநாதர் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றம்
மயிலாடுதுறை திருவிழந்தூரில் 108 திவ்ய தேசங்களில் 22வது திவ்ய தேசமும், பெருமாள் பள்ளி கொண்ட நிலையில் அருள்புரியும் ஸ்ரீரங்கம் உள்ளிட்ட பஞ்ச அரங்க கோவில்களில் 5வது கோவிலும், திருமங்கை ஆழ்வாரால் மங்களசாசனம் செய்யப்பட்ட தலமுமான பரிமள ரெங்கநாதர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி உத்திர திருவிழா விமரிசையாக நடைபெறும். இந்த ஆண்டு விழா நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. 
முன்னதாக 4 வீதிகளில் கொடி புறப்பாடும், கோவில் பிரகாரத்தில் உற்சவர் புறப்பாடும் நடைபெற்று, பின்னர் கொடியேற்றம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர். 
9ம் நாள் தேரோட்டம்
விழா ஏற்பாடுகளை, கோவில் பட்டாச்சாரியார்கள், கோவில் ஊழியர்கள் மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர். தொடர்ந்து விழா நாட்களில் உற்சவர், பல்லக்கு உள்ளிட்ட வாகனங்களிலும், 4ம் நாள் ஓலை சப்பர வீதியுலாவும், 7ம் நாள் திருக்கல்யாணமும் நடக்கிறது.
திருவிழாவின் 8ம் நாளில் வெண்ணெய்த்தாழி சேவையும், 9ம் நாள் தேரோட்டமும், தீர்த்தவாரியும் நடைபெறும். 10ம் நாளில் கொடி இறக்கத்துடன் விழா நிறைவு பெறுகிறது.

Next Story