மோட்டார் சைக்கிள்-வேன் மோதல்; தம்பதி பலி


மோட்டார் சைக்கிள்-வேன் மோதல்; தம்பதி பலி
x
தினத்தந்தி 22 March 2021 7:08 PM GMT (Updated: 22 March 2021 7:08 PM GMT)

கறம்பக்குடியில் மோட்டார் சைக்கிள், வேன் மோதியதில் தம்பதி பலியானார்கள்.

கறம்பக்குடி, மார்ச்.23-
கறம்பக்குடியில் மோட்டார் சைக்கிள், வேன் மோதியதில் தம்பதி பலியானார்கள்.
தம்பதி
 கறம்பக்குடி அருகே உள்ள வடக்குப்பொன்னன் விடுதியைச் சேர்ந்தவர் ராமு கோனார் (வயது 65). இவரது மனைவி பெரியநாயகி (55). தம்பதி இருவரும் தஞ்சாவூர் மாவட்டம் மேனட்ராயன் விடுதியில் உறவினர் வீட்டு துக்க நிகழ்ச்சிக்கு சென்றனர்.
பின்னர் இருவரும் மோட்டார் சைக்கிளில் ஊருக்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர். மோட்டார் சைக்கிள், கறம்பக்குடி புதுக்குளம் அருகே வந்தபோது, கறம்பக்குடியிலிருந்து பட்டுக்கோட்டை நோக்கி சென்ற வேன் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
2 பேர் பலி
 இதில் தூக்கி வீசப்பட்டதில் படுகாயம் அடைந்த கணவன்-மனைவி இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த கறம்பக்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆரோக்கியதாஸ், சப்-இன்ஸ்பெக்டர் பிரகாஷ் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று 2பேரில் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 துக்க வீட்டுக்கு சென்ற கணவன்-மனைவி விபத்தில் இறந்த சம்பவம் கறம்பக்குடி பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. கடந்த 7 நாட்களுக்கு முன் இதே இடத்தில் கார் கவிழ்ந்து 3பேர் காயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story