விளையாட செல்போன் தராததால் தூக்குப்போட்டு சிறுவன் தற்கொலை


விளையாட செல்போன் தராததால் தூக்குப்போட்டு சிறுவன் தற்கொலை
x
தினத்தந்தி 5 April 2021 5:48 AM GMT (Updated: 5 April 2021 5:48 AM GMT)

விளையாட செல்போன் தராததால் தூக்குப்போட்டு சிறுவன் தற்கொலை செய்து கொண்டான்.

திருவள்ளூர்,

திருவள்ளூரை அடுத்த குன்னவளம் குப்பத்து பாளையத்தை சேர்ந்தவர் கோவிந்தராஜ் (வயது 46). இவரது மகன் இஷாந்த் (16). அடிக்கடி செல்போனில் விளையாடி கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து அவரது தந்தை கோவிந்தராஜ் அவனை செல்போன் விளையாட கூடாது என்று அறிவுரை கூறி வந்தார். நேற்றுமுன்தினம் இஷாந்த் தன்னுடைய தந்தையிடம் விளையாட செல்போன் கேட்டார். அதற்கு அவர் சிறிது நேரம் கழித்து தருவதாக கூறினார்.

தற்கொலை

இதனால் கோபம் கொண்ட இஷாந்த் அறைக்குள் சென்று விளையாட செல்போன் கொடுக்காத ஆத்திரத்தில் மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டான்.

. இதுகுறித்து கோவிந்தராஜ் திருவள்ளூர் தாலுகா போலீசில் புகார் செய்தார். போலீசார் இது சம்பந்தமாக வழக்குப்பதிவு செய்து இஷாந்த்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

Next Story