குடியிருப்பு பகுதிகளில் கிருமி நாசினி தெளிப்பு


குடியிருப்பு பகுதிகளில் கிருமி நாசினி  தெளிப்பு
x
தினத்தந்தி 7 April 2021 6:37 PM GMT (Updated: 7 April 2021 6:37 PM GMT)

குடியிருப்பு பகுதிகளில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.

நொய்யல்
கரூர் மாவட்டத்தில் தற்போது கொரோனா தடுப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. அதன்ஒருபகுதியாக  நாணப்பரப்பு அருகே ஓனவாக்கல்மேடு குடியிருப்பு மற்றும் சாலை பகுதிகளில் ஓலப்பாளையம் ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் சுகாதார துறை ஆய்வாளர் வீரமணி மயில்வாகனம் மற்றும் காகித ஆலை துப்புரவு அலுவலர் ரவீந்திரன் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் கொண்ட குழுவினர் கிருமிநாசினி தெளித்தனர். அதேபோல் கொசு தொல்லையை ஒழிக்கும் வகையில் கொசு மருந்து அடித்தனர்.

Next Story