குடிநீர் தொட்டிகளில் குளோரின் பவுடர் கலப்பு


குடிநீர் தொட்டிகளில் குளோரின் பவுடர்  கலப்பு
x
தினத்தந்தி 8 April 2021 5:54 PM GMT (Updated: 8 April 2021 5:54 PM GMT)

குடிநீர் தொட்டிகளில் குளோரின் பவுடர் கலக்கப்பட்டது

நொய்யல்
கரூர் மாவட்ட சுகாதாரத்துறை சார்பில் சுகாதார துறையினர் ஒவ்வொரு பகுதிக்கும் சென்று குடிநீர் தொட்டிகளில் குளோரின் பவுடர் கலந்து வருகின்றனர். அதேபோல் நொய்யல் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஓலப்பாளையம் ஆரம்ப சுகாதார நிலைய சுகாதாரத்துறையினர் குடிநீர் தொட்டிகளை சுத்தம் செய்து மீண்டும் தண்ணீரை நிரப்பி அந்த தண்ணீரில் குளோரின் பவுடர் கலந்து வருகின்றனர். இதனால் பொதுமக்கள் வயிற்றுபோக்கு உள்பட பல்வேறு வியாதிகளில் இருந்து தப்பிக்கலாம் என சுகாதாரத்துறையினர் தெரிவித்தனர்.

Next Story