ரூ.38 ஆயிரம் மதிப்புள்ள மின்வயர் திருட்டு


ரூ.38 ஆயிரம் மதிப்புள்ள மின்வயர் திருட்டு
x
தினத்தந்தி 17 April 2021 5:56 PM GMT (Updated: 17 April 2021 5:56 PM GMT)

இளையான்குடி அருகே ரூ.38 ஆயிரம் மதிப்புள்ள மின்வயர் திருடப்பட்டது.

இளையான்குடி,

இளையான்குடி அருகே உள்ள அய்யம்பட்டியை சேர்ந்தவர் சேகர். விவசாயி. இவர் தனது கிணற்றின் பம்புசெட்டுக்கு செல்லும் மின்கம்பம் சேதம் அடைந்ததாக கடந்த டிசம்பர் மாதம் 2020-ல் சாலைக்கிராமம் மின்சார வாரிய அலுவலகத்தில் புகார் செய்தார்.
அப்போது வயலில் விவசாய பயிர்கள் இருந்ததால் பணிகள் செய்ய தாமதம் ஆனது. அதன்பின்பு கடந்த மார்ச் மாதம் 23-ந்தேதி சேகரின் பம்புசெட்டுக்கு செல்லும் மின்சாரத்தை அதிகாரிகள் துண்டித்து உள்ளனர். இதை அறிந்த மர்ம ஆசாமிகள் ரூ.38 ஆயிரம் மதிப்புள்ள மின்வயரை திருடி சென்று விட்டனர். இது குறித்த புகாரின் பேரில் சாலைக்கிராமம் போலீசார் மின்வயரை திருடியவர்களை தேடி வருகின்றனர்.



Next Story