விபத்தில் விவசாயி பலி


விபத்தில் விவசாயி பலி
x
தினத்தந்தி 26 April 2021 5:34 PM GMT (Updated: 26 April 2021 5:34 PM GMT)

சாக்கோட்டை அருகே விபத்தில் விவசாயி பலியானார்.

காரைக்குடி,

சாக்கோட்டை போலீஸ் சரகம் பனம்பட்டியை அடுத்த நவதாவு கிராமத்தைச் சேர்ந்தவர் முத்தையா (வயது 55).விவசாயி. இவர் வடகரை என்ற இடத்திலிருந்து தென்கரை நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். நான்கு ரோடு சந்திப்பு அருகே சென்ற போது சாலையில் இருந்த கல்லில் மோட்டார் சைக்கிள் மோதி நிலை தடுமாறி கீழே விழுந்தார். இதில் பலத்த காயமடைந்த முத்தையா மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.


Next Story