விவசாயி கைது


விவசாயி கைது
x
தினத்தந்தி 29 April 2021 4:28 PM GMT (Updated: 29 April 2021 4:28 PM GMT)

காட்டுப்பன்றியை வேட்டையாடிய விவசாயி கைது செய்யப்பட்டார்.

கன்னிவாடி:

பன்றிமலை அருகே உள்ள தோனிமலை புலக்கரை பகுதியை சேர்ந்தவர் ரெங்கராஜ் (வயது 50). விவசாயி. இவர், தனது நாய் மூலம் கன்னிவாடி வனப்பகுதிக்கு சென்று காட்டுப்பன்றிகளை வேட்டையாடி வீட்டில் இறைச்சியை சமைத்து கொண்டிருப்பதாக வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன்பேரில் கன்னிவாடி வனச்சரகர் சக்திவேல், வனவர் ரெங்கநாதன், வனக்காப்பாளர் நாகராஜ் ஆகியோர் ரெங்கராஜ் வீட்டுக்கு சென்றனர். 

அங்கு காட்டு பன்றி இறைச்சியை சமைத்து கொண்டிருந்த ரெங்கராஜை கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர். அவரிடம் இருந்து சமைத்த காட்டுப்பன்றியின் இறைச்சி பறிமுதல் செய்யப்பட்டது.

 இது தொடர்பாக மாவட்ட வன அலுவலர் திலீப் விசாரணை நடத்தி, ரெங்கராஜிக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்தார்.

Next Story