கார் மோதி தொழிலாளி பலி


கார் மோதி தொழிலாளி பலி
x
தினத்தந்தி 1 May 2021 7:30 PM GMT (Updated: 1 May 2021 7:30 PM GMT)

கார் மோதி தொழிலாளி பலி

பொங்கலூர்
பொங்கலூர் அருகே உள்ள தொங்குட்டிபாளையம் ஊராட்சி கைகாட்டி பகுதியை சேர்ந்தவர் நாச்சிமுத்துவயது 52. கூலித்தொழிலாளியான இவர் நேற்று இரவு 8 மணி அளவில் கைகாட்டி அருகே சைக்கிளில் சென்றுகொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக சென்ற கார் மோதியதில் பலத்த காயமடைந்த நாச்சிமுத்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து அவினாசிபாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், நாச்சிமுத்துவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story