வாலிபர் தற்கொலை


வாலிபர் தற்கொலை
x
தினத்தந்தி 4 May 2021 7:42 PM GMT (Updated: 4 May 2021 7:42 PM GMT)

பேட்டை அருகே வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.

பேட்டை:

பேட்டையை அடுத்த பழவூர் வாட்டர் டேங்க் தெருவை சேர்ந்தவர் ராமையா மகன் அருணாசலம் (வயது 19). இவர் தனது தந்தையிடம் புதிய மோட்டார் சைக்கிள் வாங்கி தர வலியுறுத்தி வந்தார். ஆனால் மோட்டார் சைக்கிள் வாங்கித்தரவில்லை என்று கூறப்படுகிறது. 

இதனால் மனமுடைந்த அருணாசலம் பூச்சி மருந்தை குடித்து மயங்கி கிடந்தார். அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அருணாசலம் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து சுத்தமல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story