மாசாணியம்மன் கோவில் சார்பில் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர்
மாசாணியம்மன் கோவில் சார்பில் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர்
பொள்ளாச்சி
கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதை தடுக்க பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில் கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
உதவி ஆணையர் கருணாநிதி பொதுமக்களுக்கு கபசுர குடிநீரை வழங்கி தொடங்கி வைத்தார். மேலும் கொரோனா நோயாளிகளுக்கு இந்து சமய அறநிலையத்துறை சார்பில் உணவு வழங்கப்பட்டு வருகிறது.
மாசாணியம்மன் கோவிலில் உணவு சமைத்து, கோட்டூர், வேட்டைக்காரன்புதூர், பொள்ளாச்சி பகுதிகளில் உள்ள அரசு ஆஸ்பத்திரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
.........................
Related Tags :
Next Story